×

மாணவர்கள் எதிர்பார்ப்பு 600 குட்டை, நீர் தேக்கங்கள் நிரம்பியது

கோவை, செப்.2: கோவை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 709 குளங்கள், கசிவு நீர் குட்டை, தடுப்பணைகள் இருக்கின்றன. தென் மேற்கு பருவ மழை உச்சமாக பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் நீர் தேக்கங்களில் நீர் தேக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் வறண்டு கிடந்த நீர் தேக்கங்களில் நீர் நிரம்பி வருகிறது. மாவட்ட அளவில், சுமார் 600 நீர் தேக்கங்களில் முழு அளவில் நீர் நிரம்பியிருக்கின்றன.

தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டாரங்களில் நீர் தேக்க குளங்கள், குட்டைகள் அதிகளவு நிரம்பியிருக்கின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், நீர் குட்டைகளும் அதிகளவு நிரம்பி விட்டன. குறிப்பாக வன விலங்குகளின் நீர் தேவைக்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பியுள்ளன.

கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் நீர் ஆதாரத்தில் உள்ள உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி உட்பட 24 குளங்கள் முழுவதும் நிரம்பி விட்டன. 21 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால், குளங்களுக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. குளங்கள் தொடர் இணைப்பில் இருப்பதால், தொடர்ந்து நீர் பாய்வதை தடுக்க முடியவில்லை. குனியமுத்தூர் செங்குளம் நிரம்பி விட்டது. இதன் உபரி நீர் வடிகால் வழியாக குறிச்சி குளத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குறிச்சி குளம் நிரம்பி வடிகால் வழியாக மீண்டும் நொய்யல் ஆற்றில் நீர் பாய்கிறது. கடந்த ஜூன் முதல் இதுவரை நொய்யல் ஆற்றில் 60 நாட்களுக்கு மேலாக நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. மழை நீர் வரத்து காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.
வெள்ள நீரில் யாரும் குளிக்கக்கூடாது. குளம், தடுப்பணைகளிலும் பொதுமக்கள் குளிக்கக்கூடாது. சேறு, சகதி மற்றும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அபாயம் இருப்பதாக பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பினர் எச்சரித்துள்ளனர். நொய்யல் குளங்கள் முழுவதும் நிரம்பியதால், அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நகரின் மையப்பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிட்டது. அரசு சார்பில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானால் 280 மாணவர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது.

Tags :
× RELATED மாநகராட்சி சொத்து மீட்பு விவகாரம் குறித்து விளக்கம்